Monday, October 24, 2011

மேக பிரளயம் ! ! !

இன்று மாலை என் கைப்பேசியில் சிக்கிய வான வேடிக்கை!!!








Sunday, September 4, 2011

ஆசிரியர் தின வாழ்த்துகள்!


எனதருமை ஆசிரிய பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்!

Monday, August 29, 2011

மலர் ....

மார்க்கர் பேனாவை வைத்து நான் வரைந்தது !



Monday, August 15, 2011

சுதந்திர தின விழா-2011

எங்கள் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் வீடியோ காட்சி


Tuesday, August 9, 2011

அதிகாலை...!!!


அடுப்படி மட்டும்தான் தெரியும்
அஞ்சு மணிக்கு...


வேலை முடிந்து நிமிர 
எட்டு மணி...


பேருந்தை பிடிக்க போராட்டம் ...
ஞாயிறு மட்டும் தூக்கத்தில் கழியும் ...


ஆனால் இன்று என்னவாயிற்று எனக்கு ?!
ஞாயிறு தானே ...
காலை அஞ்சு மணிக்கே தூக்கம் போச்சு ...


மெல்ல பால்கனியில் என் வாசம் ...
ஆகா .... இது என்ன ?!!!


முகம் காட்ட மறுக்கும் 
குயிலின் ஓசை !


முத்துக்களாய் பூத்திருக்கும்
பனித்துளி !


சிட்டுக்குருவியின் 
செல்லச் சண்டைகள் !


மொட்டவிழ்க்கும் 
 ரோஜாக்கள் !


நடை பயிலும்
 பக்கத்து வீட்டுத்தாத்தா !


நர்த்தனமாடும்
பட்டாம்பூச்சிகள் !


அன்பின் பிடியில் துணையைத் துரத்தும்
அணிலின் சாகசம் !


தென்றலில் ஆடும்
தென்னம் ஓலைகள் !


பக்தி நிரப்பும்
”கெளசல்யா சுப்ரஜா....” !


இடம்பெயரும் 
பச்சைக்கிளிகள் !


சிலிர்க்க வைக்கும்
குளிர் காற்று !


அட அடா ...இது தான் அதிகாலையோ !!!


விடுவேனா ...


இனிமேல் அஞ்சு மணிக்கு
 பால்கனி பக்கம் தான் !!!
                                           
                                    -தென்றல்                                                                                                       


Thursday, July 14, 2011

சின்னதா ஒரு படம்...






                                     
                                 எப்படியிருக்கு எங்க கரும்பலகை?!

Saturday, July 2, 2011

உங்களால் முடியுமா?

கண்மணி கேட்கிறேன்,
”உங்களால் முடியுமா?”


வளையல் வைத்து வட்டம் போட்டோம்;
கட்டம் கட்டி வீடு சமைத்தோம்.

மறைந்த மன்னன் பாடம் படித்தோம்;
திட்டம் போட்டு அவனுரு வரைந்தோம்.

கருத்துச் சொல்லும் கவிதை புனைந்தோம்;
கட்டுரை என்று கிறுக்கி வைத்தோம்.

கண்கள் விரியக் கதைகள் சொல்வோம்;
கவலைகளின்றிச் சுற்றித் திரிவோம்.

கணினி மூலம் கற்று வைத்தோம்;
கண்டும் கேட்டும் தெரிந்து கொண்டோம்.

காட்டுக்கத்தல் கத்தி வைப்போம்;
ஆசான் வந்தால் அடங்கி நிற்போம்.

தன்னலமில்லை சேர்ந்து உண்போம்;
தட்டு நிறைய வாங்கித் தின்போம்.

சின்னச் சண்டை போட்டுக்கொள்வோம்;
சிரித்துக் கொண்டே மீண்டும் சேர்வோம்.

பள்ளிச் செல்ல ஆர்வம் கொண்டோம்;
படிக்க மட்டும் வேண்டாம் என்போம்.



Friday, June 24, 2011

வாசமில்லா மலரிது....


                                             




                       எப்படியிருக்கு என் கைவண்ணம்???...

Friday, June 17, 2011

பூ...இவ்வளவுதானா?!




கண்ணில் பட்டவை...

                                             
                                          மனதில் நிறைந்தவை!



Wednesday, June 8, 2011

தேடல்...


வாழ்க்கையின் போரடிக்கும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை விட்டு  கொஞ்சம் மாறுதல் தேவைதான்!


 நானும் என்னவரும் எங்களுக்காக வாழ்ந்ததை விட என்னவரின் மூலம் கிடைத்த சொந்தத்திற்காக மாய்ந்ததுதான் அதிகம்!

புரிந்து கொள்ளும் உறவுகள் பக்கம் இல்லை;புரியாது  கொல்லும் உறவுகளுக்கு குறைவு இல்லை.

என்ன செய்தாலும் எங்களின் உணர்வுகளைக் கொன்று குளிர்காயும் உறவுகளால் உள்ளம் மட்டுமல்ல உடலின் நலமும் கெட்டது.

அதிகம் விட்டுக்கொடுத்துச் செல்லும் உறவாக மட்டுமே இருப்பதில் பலனில்லை என்பதை உணரும் காலம் வந்தது!

 மனதை உடலை காப்பாற்றிக்கொள்ளும் அவசியம் ஏற்பட்டுள்ளதையும் உணர்ந்தோம்.

வெளியுலகில் கொட்டிக்கிடக்கும் அழகினைப் 

பருகிடத் துணிந்தோம்.

எங்களுக்கு ஜீவன் அளித்த இயற்கையின்

அழகினை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள 

வேண்டி பதிவிட்டுள்ளேன்.

பார்த்து ரசியுங்கள்!


                கொடைக்கானல்.






                                                             
                       மூணார்.




மனிதர்களை விட மேம்பட்ட இயற்கையின் அழகில் உங்களை செலுத்துங்கள்!


வாழ்த்துக்கள்!


(click on the pictures to see the original size.)

Thursday, April 28, 2011

ரசிக்கும் சீமாட்டி நானே!




பயணங்கள் பல நேரம் நம் சிந்தனையைத் தூண்டும்.ஆக தினந்தோறும் பயணிக்கும் நானும் ஒரு சிந்தனாவாதி தானே!
முதலில் இரயில் பயணம்...இப்போது பேருந்து!
என்ன நெரிசல்!

கால் வைக்க இடம் தேடி
ஒற்றைக்காலில் மறுகாலை புதைத்து
நடனமாடும் போதே

பின்புறம் சின்ன உரசல்
மனசுக்குள் வலி!

சிறிதொரு நேரத்தில்
முதுகில் மூச்சுக்காற்று சுட்டுவிட
மூக்குக்குமேல் கோபம் கொப்பளிக்கிறது....

என்னசெய்ய!
என் முறைப்பில்
வெலவெலத்தவரின் நிலையும் பரிதாபம்!

கைகள் கம்பியை இறுக்கிப் பிடிக்க

”அக்கா,உட்காருங்க! நான் இறங்கப் போறேன்”
என்ன ஒரு அமுத வார்த்தைகள்!

அப்பாடா...என ஒரு வழியாய் அமர

ஐயகோ..பின்புறம் அமர்ந்திருந்த அம்மணி
தன் கதை ஊரே அறியும் படி
நவரச வார்த்தைகளில்
கைப்பேசியில் கதைக்க!

என்ன பாவம் செய்தோம் என
ஒருவழியாய் சன்னல் வழி
பார்வையை செலுத்த

கண்ணில் விரியும்
ரசிக்க மறந்த காட்சிகள்...

அடடா............
சிறு குளம்...மலர்ந்த  தாமரைகள்...
வட்டமிடும் வண்ணப்பறவை...
பரந்த நிலம்... நிறம் காட்டும் கட்டிடம்...
சிரிக்கும் பூக்கள்...உதிரும் இலைகள்...
நொடிப்பொழுதில் மாறும் காட்சி...
வருடும் காற்று..அதனூடே கேட்கும் கீதம்.

மனதையும், நினைவையும்
ஒருசேர மயக்கும் நிலை!

ம்ம்ம்ம்ம்.........இப்போது புரிகிறது
நானும் ஒரு ரசிக்கும் சீமாட்டிதான்!!!

Sunday, April 3, 2011

தாலாட்டு...


நன்றி:படம்-கூகுல் இமேஜ்
(பெரிதாக்க படத்தின் மேல் க்ளிக் செய்யவும்)

Wednesday, March 30, 2011

நிறைவு!


















                     
     ...click to see the enlarged view!

Monday, March 28, 2011

நெருக்கம்!


கட்டிடங்களில் காணலாம்;

மனித மனங்களில்?!!!!!





Thursday, March 10, 2011

மீனம்மா...

Freshwater Tropical Fish: com/freshwater-tropical-fish ... : Freshwater Tropical Fish Photos ...
வாலை ஆட்டி
வண்ணம் காட்டி 
சிலிர்த்துக்கொண்டு
இங்கும் அங்கும்...

கண்ணில் விளங்கா
பொருளைத் தந்து
பாய்ந்து திரிந்தாய்
மேலும் கீழும்...

பார்த்தேன் மகிழ்ந்தேன்
பரவசம் கொண்டே
தலையைச் சாய்த்தேன்
இப்படி அப்படி...  
                -தென்றல்                     

Monday, March 7, 2011

மகளிர் தின வாழ்த்துக்கள்!
குட்டிப் பெண்ணை தட்டிக்கொடுத்து மகளிரை சிறப்பு செய்யும் வலைப்பூவை தரிசியுங்கள் !
08/03/2011
(க்ளிக் செய்தீர்களா என் மேல்?!)

Thursday, March 3, 2011

அரும்பின் குறும்பு!

பேருந்தில் என் பயணம்...

நினைவுகள் பல உந்தித் தள்ள-சின்னக்
கவலைகள் என்னை மெல்லத் தின்ன,

கலக்கத்தை மறைக்கக் கண்மூடி நான்...

நீயோ ,

உன் குறும்புத் தீண்டலில்
என் இறுக்கம் உடைத்து,

கள்ளச் சிரிப்பில் 
கவலை துடைத்து,

மயக்கும் விழியால்
மாற்றங்கள் புரிந்து-எனை

மீண்டும் உயிர்த்தெழச் செய்தாய்...

            நன்றி ! குறும்பான அரும்பே!